இந்த பழக்கங்கள் இருக்கா..? அப்போ சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவது உறுதி

பொதுவாகவே நாணயத்தின் இரு பக்கங்கள் போல மனிதர்களிடத்திலும் நல்ல பழக்கங்களும் தீய பழக்கங்களும் இணைந்தே இருக்கும்.

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நம்மிடம் இருக்கும் சில தீய பழக்கங்கள் எந்த கிரகங்களுக்கு கோபத்தை உண்டாக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மனிதர்களிடம் இருக்கும் நல்ல பழக்கங்கள் அவர்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தும் அதே வேலை தீய பழக்கங்கள் ஒருவருடைய மதிப்பை குறைத்து விடுவதுடன் அவர்களுக்கு பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.

எந்த தீய பழக்கங்கள் கிரகங்களை பாதிக்கும்?

சில பேருக்கு உட்கார்ந்திருக்கும்போது கால்களை ஆட்டும் வழக்கம் இருக்கும். ஆனால் சந்திரன் பலவீனமாக இருப்பதைக் குறிக்கிறது. அதனால் மனநிலை சோர்வாக இருக்கும். இவர்களுக்கு பதட்டம் அதிகமாக இருக்கும். எனவே இந்த பழக்கத்தை நிறுத்திக்கொள்வது நல்லது.

நகங்களை கடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு சூரியன் ஆதிக்கம் இல்லாமல் போகின்றது.இவர்கள் கண் சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவர்கள் சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற விரும்பினால் இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.

படுக்கையறை மற்றும் குளியலறையை அசுத்தமாக வைத்திருப்பது வெள்ளி கிரகத்தின் ஆற்றலை குறைத்துவிடுகின்றது. அதனால் நிதி பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனால் மன அழுத்தமும் அதிகரிக்கும்.

சிலருக்கு கண்ட இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் இருக்கும். ஆனால் சனி பலவீனம் அடைகிறார். எனவே, இந்த பழக்கத்தை உடனே நிறுத்தாவிட்டால் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள். அதனால் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.

மறக்காமல் இதையும் படியுங்க   குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?