News

சிறுவனின் திறமைக்கும் வயசுக்கு சம்மந்தமே இல்ல… பெரிய பெரிய சங்கீத வித்துவானே தோத்துடுவார் போலயே..!

இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது இங்கே ஒரு பொடியனுக்கு இருக்கும் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த சிறுவனுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும், சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.அதேபோல் கோயில் விசேசங்களுக்கும் முதலில் மேளக்கலைஞர்களையே புக் செய்வார்கள்.

கோயில் விசேசங்களிலுக்கு இசையை ரசிக்க வருபவர்களும் அதிகளவில் உண்டு. அதிலும் நாதஸ்வர இசைக்கு மயங்காதவர்களே யாரும் இல்லை எனச் சொல்லிவிடலாம்.இங்கேயும் அப்படித்தான். கல்யாண வீடு ஒன்றில் மேளக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு சின்னச்சிறிய பொடியன் செம க்யூட்டாக மேளக்கொட்டை அடித்து ஆச்சர்யப்படுத்துகிறார். அந்த சின்னப் பொடியனின் திறமை பலரையும் மூக்கில் விரல் வைக்க வைத்துவிட்டது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares