jaffna7news

no 1 tamil news site

News

வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

ஹத்யா..

இந்தியாவில் வீட்டின் மேற்கூரையில் இருந்த பாம்பு தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது விழுந்து கடித்ததில் அவர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலத்தின் ஜகிட்டால் நகரில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

கந்தா ஹத்யா என்ற 3 வயது சிறுமி தனது பெற்றோர் அருகே படுத்து கொண்டு நேற்றிரவு தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு மேற்கூரையில் ஊர்ந்து சென்ற பாம்பு சிறுமி மீது திடீரென விழுந்தது. இதையடுத்து அலறி அடித்து கொண்டு எழுந்த ஹத்யா பாம்பை தட்டி விட முயன்றார்.

அவர் பெற்றோரும் அதை செய்ய முயன்ற நிலையில் பாம்பு ஹத்யாவை கடித்தது. பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

அக்கம்பக்கத்தினர் கூறுகையில், ஹத்யாவை கடித்தது கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு எனவும் அந்த பாம்பு அடித்து கொல்லப்பட்டுவிட்டது எனவும் தெரிவித்தனர். ஹத்யா பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அவர் பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares