jaffna7news

no 1 tamil news site

India NewsNews

காவல் நிலை.யத்திற்கு வந்த டிக் டாக் கா.தலியை அடித்த காவலர் : ஆ.டையைக் கழற்ற மு.யன்றதால் பரபரப்பு!!

காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தேடி வந்த டிக்டாக் காதலியை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் சோமசுந்தரம், இவர் டிக் டாக் போன்ற ஆப் களில் அடிக்கடி காணொளி பதிவேற்றி வந்துள்ளார்.

அதில் பிரபல டிக் டாக் பிரியாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்ட நிலையில், அவருடன் சேர்ந்து பல காணொளிகளை வெளியிட்டதுடன், அவருடன் நெருங்கியும் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சோமசுந்தரத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி கிடைத்துள்ள நிலையில், பிரியாவை விட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரியாவின் தம்பியை பொய் வழக்கில் கைது செய்துள்ளார்.

இதற்கு நியாயம் கேட்க வந்த பிரியாவை சரமாரியாக தாக்கிய நிலையில் அவரது மொபைல் போனையும் பறித்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் மொபைல் போனை தரவில்லை என்றால் காவல்நிலையத்தின் முன்னே ஆடையில்லாமல் நிற்பேன் என்று கூறி ஆடையைக் கழற்ற முயன்றுள்ளார்.

உடனே பதறிப்போன சோமசுந்தரம் போனை குறித்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.அதுமட்டுமின்றி பிரியாவை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரையும் தாக்கியதோடு, ஆட்டோவில் இருந்த ஒரு வயதான முதியவரையும் தாக்க முயன்றுள்ளார்.

குறித்த வயதான முதியவர் சோமசுந்தரத்தைப் பார்த்து நான் எத்தனை தடவை உங்களுக்கு பெண்களை அனுப்பிவைத்திருக்கேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *