jaffna7news

no 1 tamil news site

CINEMA

நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை! பிரபல தமிழ் நடிகை பகீர்

நித்யானந்தாவிடம் ஏதோ இருக்கிறது, அவரை திருமணம் செய்ய ஆசை இருக்கிறது என்றும் நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாச எனும் தனித்தீவில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், திரும்ப வந்துட்டேன் என அவர் எழுதிய கடிதம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்.கே.ஜி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த் தனக்கு நித்யானந்தாவை திருமணம் செய்ய விருப்பம் என தெரிவித்துள்ளார்.
நித்யானந்தாவிடம் ஏதோ இருக்கிறது

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நித்யானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்யானந்தாவில் நித்யானந்த் என இருக்கிறது.என் பெயர் பிரியா ஆனந்த், எங்களுக்கு திருமணம் நடந்தால் நான் பெயரை மாற்ற வேண்டிய தேவையே இருக்காது.

நித்யானந்தாவுக்கு மக்களை ஈர்க்கத் தெரியும். அவரை இத்தனை பேர் பாலோ செய்கிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ இருக்கிறது என்றுதானே அர்த்தம்’ என தெரிவித்தார்.

அவரது இந்த விருப்பத்தை அறிந்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நித்யானந்தா குறித்து பல பதிவுகளை தனது சமூக வலைதளத்தில் பிரியா ஆனந்த் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares