7 வயது மகளுக்கு தாய் செய்த கொடுமை; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!

கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் கையடக்கத் தொலைபேசிகளை திருடி தாயிடம் கொடுக்காவிட்டால் தனது தாய் தன்னை தாக்குவதாக தெரிவித்தார்.

விளக்கமறியலில் தாய்
அத்துடன் திருடிய கையடக்கத் தொலைபேசிகளை தனது தாய், தந்தையிடம் கொடுப்பதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றின் தாயின் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து கைதான சிறுமியின் தாய் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை.. பொலிசார் தீவிர விசாரணை!!
Shares