ஜேர்மனி நாட்டிலிருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவாகரத்தான 63 வயதான மாப்பிளைக்கும் 2 குழந்தைகளின் தாயாரான விவாகரத்தான 35 வயதான மணமகளுக்கு யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல திருமணமண்டபத்தில் பெரும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
குறித்த திருமண நிகழ்வில் யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவரும் கலந்து கொண்டிருந்தாராம்.
மணமகளின் சேடிப் பெண்களாக பெண் குழந்தைகளுடன் குழந்தைகளாக மணமகளின் இரு பெண் பிள்ளைகளும் பூ கொண்டு தாயின் பின்னால் சென்றார்களாம். மணமகனான மாப்பிளைக்கும் மணமகளின் வயதில் ஒரு ஆண் பிள்ளை இருப்பதாகவும் அந்தப் பிள்ளையும் திருமணம் முடித்து மணமகளின் பிள்ளைகளின் வயதில் குழந்தைகள் உள்ளதாகவும் மாப்பிளையின் உறவுக்காரர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளது.
63 வயதான ஜேர்மன் மாப்பிளை 58 வயதில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இதே வேளை குறித்த திருமணத்தை யாழில் உள்ள ஒரு திருமண புறோக்கர் சேவை நிலையமே ஒப்பேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்ட குறித்த திருமண நிகழ்வுகளின் சிறுபகுதி உங்களுக்காக இங்கு தருகின்றோம்.